Monday 27 April 2015

தண்ணீர் தண்ணீர்

💧💧2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய
கற்பனை..
இன்றைய முக்கிய செய்திகள்

🏠ஈரோடு அருகே வீட்டில்
பூட்டி வைத்திருந்த மூன்று குடம்
தண்ணீர் திருட்டு போலீஸ் வலை வீச்சு .

👫மூன்று வயது குழந்தையை lkgயில்
சேர்ந்த இரண்டு குடம் தண்ணீர்
நன்கொடையாக கேட்ட
பள்ளி உரிமையாளர் கைது...

🙋கணவனுக்கு தெரியாமல் வீட்டில்
வைத்திருந்த 4 குடம்
தண்ணீரை எடுத்துக்கொண்டு
மனைவி கள்ளக்காதலுடன்
ஓட்டம் .கணவன் 4 குடம்
தண்ணீரை கண்டு பிடித்து தருமாறு போலீசீல்
புகார் ...

💂இரண்டு குடம் தண்ணீர் கொடுத்தால்
ஒரே வருடத்தில் 50 குடம் தண்ணீர்
தருவதாக தண்ணீர் மோசடி கும்பல்
கைவரிசை....

😎நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
ரேசன்கடையில் 3 குடம் தண்ணீர்
தருவதாக எதிர்கட்சிகள் வாக்குறுதி..இதற
க்கு ஆளும்கட்சி கடும் கண்டனம் ....

🚀பூமியிலிருந்து செவ்வாய்
கிரகத்திற்கு ராக்கெட். மூலம்
கடத்தி சென்ற 20,000 லிட்டர்
தண்ணீரை விண்வெளி காவல்துறையினர்
பறிமுதல்செய்தனர்

🏦உலக தண்ணீர் வங்கியில்
இருந்து இந்தியா 50 கோடி லிட்டர்
தண்ணீர் கடன் வாங்கியது

👪பொது மக்கள் அனைவரும் மாதம்
ஒரு முறை மட்டுமே குளிக்க வேண்டும்
இரண்டு சொம்பு தண்ணீர்
மட்டுமே பயன்படுத்த வேண்டும்
என்று புதிய சட்டம்
அமல்படுத்தியது .மீறினால்
இரண்டு சொம்பு தண்ணீரும் பறிமுதல்
செய்யும்..

🏆உலக தண்ணீர் world cup கிரிக்கெட்டில்
இந்தியா தண்ணீர்
கோப்பையை வென்றது ...

⛲இன்றைய தண்ணீர் நிலவரம்..
கிணற்று நீர் ஒரு லிட்டர் 5000
ரூபாய்க்கும்
ஆற்று நீர் ஒரு லிட்டர் 10,000
ரூபாய்க்கும்
சுத்திகரிக்கப்பட்ட நீர் ஓரு லிட்டர் 15,000
ரூபாய்க்கும் விற்கபடுகின்றன...

நீரை வீணாக்காமல் இருப்போம்

🌴மரம்...வளர்ப்போம்..
வருகாலத்தை...வளமாக்குவோம்...🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌲🌲🌲🌲🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳👍

No comments:

Post a Comment