Tuesday 5 May 2015

அடுத்து என்ன படிக்கலாம்?

👉அண்ணே அடுத்தவாரம் +2
ரிசல்ட் வருது..

❗அதுக்கு என்னல தம்பி?

👉அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு
தெரியலணே,

❗மொதல்ல ஒன்னோட ஆசையச்
சொல்லுடே..

👉அண்ணே டாக்டருக்கு படிக்கவா?

❗டாக்டராகி சேவை செய்வேனு
பேட்டி மட்டும் தான்
கொடுக்கத்தெரியும், ஆனா
செய்யமாட்டிங்க, வேற சொல்லு..

👉அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா?

❗இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல
நாலுபேரு கெடக்கானுவோடே..

👉அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே,

❗ஏன்டா? ஏன்? நான் படுற பாடு
போதாதா? (நோட் திஸ் பாய்ண்ட்
ப்ரெண்ட்ஸ்) அட பொண்ணு
கெடைக்காதுடா..

👉அப்போ பைலட்டுக்கு படிக்கட்டுமா?
ஏதுக்கு?

❗மலேசியா பிளேன
பாத்தல்ல..

👉அப்போ மரைன் ஓகேவா?

❗வேணாம்ல உனக்கு தண்ணியில கண்டம்,
நீச்சல் வேற தெரியாது..

👉பேசாம ராணுவத்துக்கு
போகட்டுமாணே?

❗அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டல..

👉போலீசு வேலைக்காவது ட்ரை
பன்னவாணே?

❗லஞ்சத்த வாங்கி தின்னுட்டு, பொம்பள
போலீசு கூட போன்ல "ஒன்னு
குடுக்கட்டுமா?னு" கேப்ப,
வெளுத்துபுடுவேன் ரஸ்கல்..

👉அப்போ ஏதாவது டிகிரியவாது
முடிக்கவாணே?

❗சத்தியமா வேலை கிடைக்காதுல,
தமிழ் நாட்ல டிகிரி முடிச்சவன் ஒரு
கோடி பேரு கெடக்கான்..

👉கேட்ரிங் ஓகேவா?

❗சமையல் செய்றதெல்லாம் கல்யாணம்
முடிஞ்சதும் நீயே கத்துப்ப ,
வேஸ்ட்ல..

👉ஏதாவது சீட்டு கம்பேனி பிசினஸ்
பன்னட்டுமா?

❗ஊர்துட்ட திங்க அலையாத, அது நல்லது
இல்ல ..

👉ஏதாவது யாவாரம் பன்ன கடைய
ஆரமிக்கட்டுமா?

❗இன்னொருத்தன் உழைச்சி தர்ரத உக்காந்த
இடத்தில யாவாரம் பண்ணி
திங்கலாம்னு பாக்க, "குண்டக்கா
மண்டக்கா" திட்டீருவேன்..

👉டீக்கடைய போடட்டுமா?

❗பிரதமர் ஆகி நாடு நாடா
சுத்திகிட்டும், முதல்வர் போல
டம்மியா இருக்கலாம்னு பாக்க,
"தூக்கி அடிச்சிருவேன்
பாத்துக்கோ"..

👉வெளிநாட்டுக்கு போய்
சம்பாதிக்கட்டுமா?

❗அங்க பாதி பேரு தாய், தகப்பனுக்காக
கெடக்குறாங்கடா, மீதி பேரு தாய்
நாட்டப்பத்தி கூட சிந்திக்க
மாட்டானுங்கல..

👉👉👉 அப்போ நான் என்னதான் பன்ன?

❗❗❗அந்தா கெடக்கு பாரு மம்புட்டி, அத
தூக்கு, போய் வயல கொத்து, நாலு
வருசம் நாயா கஷ்டப்படு, அடுத்த பத்து
பத்து வருசத்து அப்புறம் நீ தான் சாமி
எங்களுக்கு கடவுள்.

👉ஏன்ணே இப்புடி சொல்ற?

❗ஆமால தம்பி, எல்லா படிப்ப
படிக்குறதுக்கும் ஆள் இருக்கு, ஆனா
எல்லோரும் சாப்பிடுறதுக்கு
விவசாயம் பன்ற ஆள் இல்லடே..


👉👉அப்புடி சொல்லாதணே நான்👍
இருக்கேன்,

❗அப்புடி சொல்றா என் சிங்கக்குட்டி,
தூக்குடா மம்புட்டிய, வாடா
வயலுக்கு போவோம், உனக்கு நான்
உதவி பன்றேன்டா..
# விவசாயி_அழிந்தால் ?
# விவசாயம்_அழியும் ,
# விவசாயம்_அழிந்தால் ?
# உலகமே_அழியும் .
🌾🌾🌾🌾🌾
உங்க நண்பன்.

Boss Boss

BOSS in office : Okay guys, today we are going to play a game.....

When I say a name of the fruit, you run to the right  side of the hall....

And when I say any color, you run to the left side of the hall....

One who runs on wrong side will not get the increment...
got it ?

Employees : Yes Boss, Got it.

Boss : Okay...Ready, Set...
.  ... ....
..... "ORANGE" !

Employees : 😡😡😡😡😡😣😣😣😣😫

Monday 27 April 2015

தண்ணீர் தண்ணீர்

💧💧2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய
கற்பனை..
இன்றைய முக்கிய செய்திகள்

🏠ஈரோடு அருகே வீட்டில்
பூட்டி வைத்திருந்த மூன்று குடம்
தண்ணீர் திருட்டு போலீஸ் வலை வீச்சு .

👫மூன்று வயது குழந்தையை lkgயில்
சேர்ந்த இரண்டு குடம் தண்ணீர்
நன்கொடையாக கேட்ட
பள்ளி உரிமையாளர் கைது...

🙋கணவனுக்கு தெரியாமல் வீட்டில்
வைத்திருந்த 4 குடம்
தண்ணீரை எடுத்துக்கொண்டு
மனைவி கள்ளக்காதலுடன்
ஓட்டம் .கணவன் 4 குடம்
தண்ணீரை கண்டு பிடித்து தருமாறு போலீசீல்
புகார் ...

💂இரண்டு குடம் தண்ணீர் கொடுத்தால்
ஒரே வருடத்தில் 50 குடம் தண்ணீர்
தருவதாக தண்ணீர் மோசடி கும்பல்
கைவரிசை....

😎நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
ரேசன்கடையில் 3 குடம் தண்ணீர்
தருவதாக எதிர்கட்சிகள் வாக்குறுதி..இதற
க்கு ஆளும்கட்சி கடும் கண்டனம் ....

🚀பூமியிலிருந்து செவ்வாய்
கிரகத்திற்கு ராக்கெட். மூலம்
கடத்தி சென்ற 20,000 லிட்டர்
தண்ணீரை விண்வெளி காவல்துறையினர்
பறிமுதல்செய்தனர்

🏦உலக தண்ணீர் வங்கியில்
இருந்து இந்தியா 50 கோடி லிட்டர்
தண்ணீர் கடன் வாங்கியது

👪பொது மக்கள் அனைவரும் மாதம்
ஒரு முறை மட்டுமே குளிக்க வேண்டும்
இரண்டு சொம்பு தண்ணீர்
மட்டுமே பயன்படுத்த வேண்டும்
என்று புதிய சட்டம்
அமல்படுத்தியது .மீறினால்
இரண்டு சொம்பு தண்ணீரும் பறிமுதல்
செய்யும்..

🏆உலக தண்ணீர் world cup கிரிக்கெட்டில்
இந்தியா தண்ணீர்
கோப்பையை வென்றது ...

⛲இன்றைய தண்ணீர் நிலவரம்..
கிணற்று நீர் ஒரு லிட்டர் 5000
ரூபாய்க்கும்
ஆற்று நீர் ஒரு லிட்டர் 10,000
ரூபாய்க்கும்
சுத்திகரிக்கப்பட்ட நீர் ஓரு லிட்டர் 15,000
ரூபாய்க்கும் விற்கபடுகின்றன...

நீரை வீணாக்காமல் இருப்போம்

🌴மரம்...வளர்ப்போம்..
வருகாலத்தை...வளமாக்குவோம்...🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌲🌲🌲🌲🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳👍

நமது உடல்!

இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள்
2. ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை.
3. நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கும் அளவு 400 கன அடி காற்று.
4. மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராணவாயுவில் 20 சதவிகித அளவு.
5. உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடதுபக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது.
6. உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது.
7. ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள்.
8. இரத்த சிவப்பணு எரித்ரோசைட் என்றும், வெள்ளை அணு லியூக்கோசைட் என்றும் அழைக்கப்படுகிறது.
9. இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்த்த்தை ஒரு நிமிடத்திற்குள் கொண்டு போய் சேர்க்கின்றன.
10. மனித உடலில் ஐந்தரை லிட்டர் இரத்தம் உள்ளது.
11. ரெடினா என்பது விழித்திரை
12. ஹைப்போஜியுஸியா என்பது நாக்கில் ஏற்படும் நோய். இதன் அறிகுறி சுவை குறைந்து விடும்.
13. ஓரோபாரின்க்ஸ் என்பது வாயின் பின்பகுதி, தொண்டையில் சேருமிடம்.
14. கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறது.
15. மீடியாஸ்டினம் என்பது இரண்டு நுரையீரல்களுக்கு இடைப்பட்ட பகுதி
16. ப்ளூரா என்பது நுரையீரல் உறை
17. இன்சுலின் – இதன் வேலை ரத்த்த்தில் இருக்கும் சர்க்கரை அளவை சரியாக வைப்பது.
18. சிறுநீரகங்கள் கீழ் முதுகில், முதுகுத் தண்டிற்கு இருபக்கமும் உள்ளன.
19. அல்வியோலஸ் என்பது மெல்லிய சுவருடைய காற்று செல். மனித நுரையீரல்களில் 750,000,000 அல்வியோலஸ் செல்கள் உள்ளன.
20. ஒரு குழந்தை 330 எலும்புகளுடன் பிறக்கிறது.
21. உடலில் 206 எலும்புகள் உள்ளன.
22. பிபுல்லா என்பது முழங்காலையும் குதிகாலையும் இணைக்கும் எலும்பு
23. மனித உடலில் உள்ள நீளமான எலும்பு தொடை எலும்பு.
24. மனித உடலில் உள்ள சிறிய எலும்பு காது எலும்பு.
25. மனித உடலில் உள்ள முதுகெலும்புகள் 33.
26. முகத்தில் உள்ள எலும்புகள் 14.
27. கைகளில் உள்ள எலும்புகள் 27.
28. மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.
29. மூளையில் பெரிய பகுதி பெரு மூளை – செரிப்ரம் என்று அழைக்கப்படுகிறது. இது பேச்சு, பார்வை, கேட்டல், நுகரல், சிந்தனை, ஞாபகம், செயல், உணர்வு, இயக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறத.
30. சிறு மூளை உடல் சமன்பாடு, அசைவுகளை இணைத்தல் பணியை செய்கிறது.
31. உணவுப் பாதையின் நீளம் – வாய் முதல் மலவாய் வரை 15 அடிகள்
32. நகமாக வளரும் புரதப் பொருள் கெரட்டின்.
33. எலும்பு மஜ்ஜை ஒரு நாளைக்கு 25000 கோடி இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது.
34. மூக்கில் 60 மில்லியன் உணர்வு செல்கள் உள்ளன.
35. மனித உடலிலுள்ள எலும்புகள் ஒன்பது கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
36. பெருவிரலுக்கும் மூளைக்கும் தொடர்பு அதிகமாக உள்ளது.
37. நம் தலையில் சுமார் 1,50,000 முடிகள் உள்ளன.
38. 30 வயதிற்கு மேல் புதிய தலை முடி உருவாகுவதில்லை.
39. குருதி உறைதலுக்கு காரணமான நொதி திராம்பின்
40. ஒரு மனிதன் உடலில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் சிறுநீர் உற்பத்தியாகிறது.
41. சிறுநீர்ப்பை 600 மிலி சிறுநீரை கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது.
42. இருமும் போது ஏற்படும் ஒலியின் வேகம் மணிக்கு 245 மைல்கள்.
43. இருதயப் பணியின் ஒரு சுழற்சி முடிய 0.8 வினாடி நேரமாகிறது.
44. உடலில் வளராத, மாறாத பகுதி கண்ணிலுள்ள பாப்பா.
45. ஒரு நாளில் இரத்தம் நமது உடலில் 1680 மைல் தூரம் அளவு ஓடும்.
46. குடலில் மொத்த நீளம் 9 மீட்டர்.
47. உடலில் வேர்க்காத பகுதி உதடுகள்
48. உடலில் குளிர்ச்சியான இடம் மூக்கின் நுனி.
49. மூளையின் எடை சராசரி ஒன்றரை கிலோ.
50. உடலின் சீரான வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்.
51. ஒரு நாளில் 1200 முதல் 1500 மிலி வரை உமிழ் நீர் சுரப்பாகிறது.
52. வெஸ்டிபுலே – எனப்படுவது பற்கள், கன்னத்திற்கு இடைப்பட்ட பகுதி.
53. சைனஸ் என்பது முக எலும்புகளிலுள்ள காற்றறைகள். சுவாசிக்கும் காற்றை நுரையீரலுக்கு தகுந்தவாறு சீர்படுத்துவது இதன் பணியாகும். குரல் தெளிவாக இருக்க, முக எலும்புகள் கனம் குறைய இது உதவுகிறது.
54. இரத்தக் கசிவு 1 முதல் 3 நிமிடங்கள் இருக்கும்.
55. இரத்தம் உறைவதற்கான நேரம் 4 முதல் 8 நிமிடங்கள்.
56. உடலின் தோல் மூன்று அடுக்கால் ஆனது. தோலின் மேலடுக்கு எபிடெர்மிஸ், இதில் இரத்த ஓட்டம் இல்லை. தோலின் இரண்டாவது அடுக்கு டெர்மிஸ் பகுதி என்றும், அடிப்புற அடுக்கு அடித்தோல் என்றும் அழைக்கப்படுகிறது.
57. மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் ரிப்ஸ்.
58. நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் உள்ளது.
59. கழுத்து வலி மருத்துவத் துறையில் செர்விகல் ஸ்பான்டிலிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.
60. ஹைப்பர் தெரிமியா என்பது உடல் வெப்பநிலை அதிகமாகுதல்.
61. ரேணுலா என்பது நாக்குக்கு அடியில் தோன்றும் நீர்க்கட்டி
62. எலும்பு, பற்களில் உள்ள புரதம் ஆஸ்சின்.
63. மனித உடலில் வியர்வை சுரப்பிகள் சுமார் 3 மில்லியன்களுக்கு மேல் உள்ளன.
64. செரடோனின் – வேதிப்பொருள் குறையும் போது தலைவலி ஏற்படும்.
65. வேகஸ் நரம்பிற்கு இதயத் துடிப்பை குறைக்கும் தன்மை உள்ளது.
66. இரத்தத்திற்கு நிறம் கொடுப்பது ஹீமோகுளோபின்.
67. பெருங்குடலின் நீளம் 100 முதல் 150 செ.மீ ஆகும். சிறுகுடலின் நீளம் 5 மீட்டர்.
68. பெருங்குடலின் பணி தண்ணீர் மற்றும் தாது உப்புக்களை உறிஞ்சுதல்.
69. உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்.
70. பித்தப்பை கல்லீரலின் கீழ்ப் பாகத்தில் அமைந்துள்ளது.

அடப்பாவி

உண்மை சம்பவம்
திருச்சி'ல நேற்று நடந்த ஒரு
கொடுமையான சம்பவம், நேற்று காலை
8 மணிக்கு பூஜா என்ற பெண்ணை,
அவளது சொந்த மாமா, மற்றும்
விநாயகம் என்ற ஆட்டோ டிரைவர் இருவரும்
வீட்டில் இருந்து கதற கதற இழுத்து
சென்று
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

LKG ல சேத்துட்டாங்க

சே.......பாவம்ல.😔😞😣

Thursday 23 April 2015

புத்தகம்

இன்று உலக புத்தக தினம்

புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மக்கள் மத்தியில் வளர்க்கும் வகையில் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. நூல்கள் படித்து பாதுகாக்கப்பட வேண்டிய காலப்பெட்டகம். இது காகிதங்களில் அச்சடிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தொகுப்பு அல்ல. கடந்த கால வரலாற்றை, இன்றைய நிகழ்வுகளை, செய்திகளை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு சேர்க்க எழுத்தின் வழி பதிவு செய்யப்பட்ட ஆவணமே நூல்கள்.

பாரீஸ் நகரில் 1995-ம் ஆண்டு ஆகஸ்டு 25 முதல் நவம்பர் 16-ந்தேதி வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ‘‘அறிவை பரப்புவதற்கும் உலகமெங்கும் உள்ள பல்வேறு கலாசாரங்களை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலக்கிய மேதை ஷேக்ஸ்பியரின் பிறந்த தினமான ஏப்ரல் 23 அன்று புத்தக தினம் கொண்டாடுவதை பொருத்தமான ஒரு விஷயமாக யுனெஸ்கோ மாநாடு கருதியது. புத்தகம் வெறும் எழுத்துகளையோ, வெற்றுத் தாள்களின் தொகுப்புகளையோ கொண்டது அல்ல. ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணக்கனவு, லட்சியங்களை கொண்டிருக்கிறது.

விதைக்குள் விருட்சம் போல் ஒரு சமூகத்தின் எழுச்சிக்கான கருத்துகளை சில புத்தகங்கள் தன்னுள் கொண்டிருக்கின்றன. அதனால் தான் ஆட்சி அதிகாரத்தையே உலுக்கி விடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு என்கிறார் கார்லைஸ் எனும் அறிஞர். ‘‘துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள்’’ என்று கூறி இருக்கிறார் மார்ட்டின் லூதர்கிங்.

சட்டமேதை அம்பேத்கர் ஒருமுறை வெளிநாடு சென்றிருந்த போது, ‘‘எங்கு தங்க விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டதற்கு, ‘‘எந்த இடம் நூலகத்திற்கு அருகில் இருக்கிறது?’’ என கேட்டு இருக்கிறார்.

நவ இந்தியாவின் சிற்பி ஜவகர்லால் நேருவிடம், ‘‘உங்களை ஒரு தனி தீவுக்கு நாடு கடத்தினால் என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்டதற்கு ‘‘புத்தகங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பேன்’’ என்று பதில் அளித்தார்.

குழந்தைகளுக்கு பிறந்தநாளின் போதும், விழாக்களின் போதும் எண்ணற்ற பரிசுகளை வாங்கி தருகிறோம். ‘‘குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கி தர வேண்டிய மிகச்சிறந்த பரிசு புத்தகங்களே’’ என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.

பூத்த மலரில் தான் நறுமணம் வீசும். ஓடுகின்ற நீரோடை தான் சுத்தமாக இருக்கும் எரிகின்ற விளக்கால் தான் இன்னொரு விளக்கை ஏற்ற முடியும்.

அறிவை விரிவு செய். அகண்டமாக்கு என்பது பாரதிதாசனின் வெறும் கவிதை வரிகள் அல்ல. வேத வாக்கு. வாசிப்பை நேசிப்போம். சுமையாக கருதாமல் சுவாசத்தை போல் இயல்பானதாய் ஆக்குவோம் அறிவை ஆயுதமாக மாற்றுவோம். தெருவெங்கும் நூலகம். வீடுதோறும் புத்தகம். இதுவே நமது லட்சியம்.